உள்ளூர் செய்திகள்

கரும்புகள் தீர்ந்ததால் காரை அடித்து நொறுக்கிய யானைகள்

Published On 2022-06-26 12:22 IST   |   Update On 2022-06-26 12:22:00 IST
  • ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது.
  • சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த தேசிய நெடு ஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூர் அடுத்த அரே பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது. இதை கண்டு வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை பின் நோக்கி இயக்கினர்.

அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூருக்கு ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அந்த வாகனத்தை யானைகள் துரத்தியது. டிரைவர் வாகனத்தை வேகமாக பின்னோக்கி இயக்கி தப்பித்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் வந்த மற்றொரு காரை யானைகள் வழி மறித்து தும்பிக்கையால் அடித்து நொறுக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் இருந்தவர் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார்.

இதை யடுத்து வாகன ஓட்டிகள் சத்தம் போட்டனர். ஆனால் அங்கேயே உலாவிய யானை கள் சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ஆசனூர் வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அதிக பாரம் இருந்ததால் டிரைவர் அந்த லாரியில் இருந்து கரும்புகளை ரோட்டோ ரம் வீசி விட்டு சென்றார்.

இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ரோட்டோரம் இருந்த கரும்புகளை சாப்பிட்டது. கரும்புகள் தீர்ந்து விட்டதால் யானைகள் அங்கேயே உலாவி கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை யானை கள் வழி மறித்து அட்ட காசம் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வழியாக கரும்பு கள் ஏறறி வரும் லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீசி விட்டு செல்கிறார்கள். இதை சாப்பிடுவதற்காக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்து வருகிறது.

எனவே லாரி டிரைவர்கள் கரும்புகளை ரோட்டோரம் வீச வேண்டாம். மீறி கரும்புகளை வீசுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News