உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2023-09-13 15:02 IST   |   Update On 2023-09-13 15:02:00 IST
  • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோனவாய்க்கால் சுக்கான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற மாநகராட்சி பூங்கா பராமரிப்பாளர் ஆவார்.இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள மோட்டா ரை ஆப் செய்து விட்டு மோட்டாரின் வால்வை திறந்து விட்டார். அப்போ து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சேகர் கீேழ விழுந்தார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜனார்த்தனன் ஈரோடு தெற்கு போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News