உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

Published On 2023-04-11 10:07 GMT   |   Update On 2023-04-11 10:07 GMT
  • விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
  • ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு:

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொது த்தேர்வு நிறைவடை ந்துள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

விடைத்தாள்கள் ஈரோடு மாவட்டத்தில் மாமரத்து பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பா ளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளி யில் சேகரித்து வைக்கப்ப ட்டுள்ளது.

குலுக்கல் முறை யில் விடைத்தாள்கள் வெவ்வேறு மாவட்டத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்க ப்பட்டு ள்ளது. அதேபோல் பிற மாவட்ட விடைத்தா ள்கள் ஈரோடு மாவட்டத்தி ற்கு வந்துள்ளது.

இந்து கல்வி நிலையம், எஸ்.வி.என் பள்ளி, பாரதி வித்யாலயா பள்ளி மைய ங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை யினர் கூறியதாவது:

பிளஸ்-2, அதைத்தொ டர்ந்து பிளஸ்-1 விடை த்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. 12 நாட்க ளில் ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவு பெறும். இந்த பணியில் ஈரோடு மாவட்டத்தில் 1,800 ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News