உள்ளூர் செய்திகள்
- போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த தங்கவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரைச்சாமி மகன் தங்கவேல் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.