உள்ளூர் செய்திகள்
- போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பவானி சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மகேந்திரன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.