அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்
- அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொட ர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை,
கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்பு டைய அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் (ஆசனூர்) சுதாகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வ ராஜன், வருவாய் கோட்டா ட்சியர்கள் சதீஸ்குமார் (ஈரோடு), திவ்யபிரிய தர்ஷினி (கோபிசெட்டி பாளையம்),
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (ஈரோடு) மோகன், (பெருந்துறை) உதயகுமார் உள்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.