உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி

Published On 2023-10-07 09:33 GMT   |   Update On 2023-10-07 09:33 GMT
  • கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
  • தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

நம்பியூர்:

நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News