உள்ளூர் செய்திகள்
கொமாரபாளையம் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
- வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.
- மண்புழு உரக்கொட்டகை, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
சத்தியமங்கலம்:
கொமாரபாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.
மேலும் கொமாரபாளையம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் ஊராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுபண்ணை, மண்புழு உரக்கொட்டகை, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
உடன் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், ஒன்றிய ஆணையாளர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப், உதவி பொறியாளர் ஜெயகாந்த்,
பணிபார்வையாளர் வெள்ளிங்கிரி, துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, வார்டு உறுப்பினர் சாவித் திரி ரங்கராஜ், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் பலர் இருந்தனர்.