உள்ளூர் செய்திகள்

நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆண்டு தணிக்கை மேற்கொண்டார்.

தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-12 09:42 GMT   |   Update On 2023-04-12 09:42 GMT
  • நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
  • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் 2019-2021-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு,

நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நிலஅளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நிலஅளவைபிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

மேலும் ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் தாசில்தார் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, நம்பியூர் தாசில்தார் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News