உள்ளூர் செய்திகள்

கோவை சரக டி.ஜ.ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு

Published On 2023-11-23 15:09 IST   |   Update On 2023-11-23 15:09:00 IST
  • கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு வந்து திடீர் என ஆய்வு மேற்கொ ண்டார்.
  • தாளவாடி போலீஸ் நிலையம் சென்று அங்குள்ள கோப்பு களையும் ஆய்வு செய்தார்.

தாளவாடி:

கேரள மாநிலத்தில் போலீ சாருக்கும், மாவோயி ஸ்டுகளுக்கும் கடந்த 13-ந் தேதி துப்பாக்கி சண்டை நடந்தது. அப்பொழுது மாவோஸ்டுகள் துப்பாக்கிகளை போட்டு விட்டு தப்பி ஓடித் தலைமறைவாயினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களுடன் தமிழக-கர்நாடக எல்லை யான ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் மற்றும் கேர்மாளம் சோ தனைச் சாவடியில் தனிப்ப டை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த நிலை யில் நேற்று மாலை கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு வந்து திடீர் என ஆய்வு மேற்கொ ண்டார்.

வாகனச் சோதனையையும் பார்வையிட்டார். பின்னர் தாளவாடி போலீஸ் நிலை யம் சென்று அங்குள்ள கோப்பு களையும் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News