உள்ளூர் செய்திகள்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை கூடத்தில் தேங்காய் ஏலம்

Published On 2023-07-26 09:36 GMT   |   Update On 2023-07-26 09:36 GMT
  • விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
  • தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 325 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 2 ஆயிரத்து 260 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 48 ஆயிரத்து 239 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

Similar News