உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 3 பேர் மீது வழக்கு

Published On 2023-09-30 14:46 IST   |   Update On 2023-09-30 14:46:00 IST
  • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்குமார் (வயது 31), நசியனூர் வேலுச்சாமி மனைவி வாணிஸ்வரி (37), வீரப்பன்சத்திரம் வெள்ளியங்கிரி மகன் கணேஷ் (23) ஆகியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 400 மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News