உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

Published On 2023-11-16 15:13 IST   |   Update On 2023-11-16 15:13:00 IST
  • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • 8 பவுன் நகைகள் காணாமல் போனது.

பெருந்துறை:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராேஜஸ் (வயது 36). இவர் பெருந்துறை பவானி ரோடு நாராயணா லே அவுட் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.

மேலும் அவர் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் பைப் மோட்டார் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவதற்காக அவரது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சென்று விட்டார்.

இதை தொடர்ந்து அவர் நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன், 2 நெக்லஸ்கள், 2 தங்க மோதிரங்கள், கம்மல்கள் உள்பட 8 பவுன் நகைகள் காணாமல் போனதும், இதை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றதும் தெரிய வந்தது.

இது குறித்து ராஜேஸ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்றது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.

Tags:    

Similar News