உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2023-11-19 07:37 GMT   |   Update On 2023-11-19 07:37 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.68 அடியாக உள்ளது.
  • மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது. நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.68 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 864 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,200 கனஅடியாக நீர் அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.57 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.49 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News