உள்ளூர் செய்திகள்
தீபாவளியையொட்டி வாழைக்காய் ஏலம் ரத்து
- கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
- வரும் 22-ந்தேதி வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது.
கோபி:
கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 22-ந்தேதி (சனிக்கிழமை) வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது. தேங்காய் ஏலம் வழக்கம்போல நடைபெறும்.
இந்த தகவலை மேலாண்மை இயக்குனர் ஆர். சுரேஷ், பொதுமேலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.