உள்ளூர் செய்திகள்

தீபாவளியையொட்டி வாழைக்காய் ஏலம் ரத்து

Published On 2022-10-18 09:50 GMT   |   Update On 2022-10-18 09:50 GMT
  • கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.
  • வரும் 22-ந்தேதி வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது.

கோபி:

கோபிசெட்டிபாைளயத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாழைக்காய் ஏலம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 22-ந்தேதி (சனிக்கிழமை) வாழைக்காய் ஏலம் நடைபெறாது. ரத்து செய்யப்படுகிறது. தேங்காய் ஏலம் வழக்கம்போல நடைபெறும்.

இந்த தகவலை மேலாண்மை இயக்குனர் ஆர். சுரேஷ், பொதுமேலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News