உள்ளூர் செய்திகள்

ஆகாய விமான அலகு குத்தி நூதன வழிபாடு

Published On 2023-06-05 07:07 GMT   |   Update On 2023-06-05 07:07 GMT
  • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.
  • அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

சென்னிமலை ,

சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவை யொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.

இதை தெடர்ந்து பிராட்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கார்த்தி, செல்வா, கண்ணன் ஆகி யோர் வேனின் மேல்பகுதி யில் விமான அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

மேலும் பக்தர்கள் 12 அடி நீளமுள்ள அலகை வாயில் குத்தி துர்க்கை அம்மன் கோவில் வரை வந்து அம்மனை வழி பட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதையடுத்து அன்னதானம் வழங்க ப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற்றது.

Tags:    

Similar News