உள்ளூர் செய்திகள்

மலைக்கணுவாயில் மரத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்

Published On 2022-09-20 09:37 GMT   |   Update On 2022-09-20 09:37 GMT
  • சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய்.
  • இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை காங்கயம் ரோட்டில் உள்ளது மலைக் கணுவாய். இதை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது‌. இங்குள்ள மரம் ஒன்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்குபோட்ட நிலையில் தொங்கியதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை .

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்‌. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அங்கு மரத்தில் தொங்க விட்டுள்ளனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

சென்னிமலை டவுன் அருகே உள்ள வனப்ப குதியில் மலைக்கணுவாய் அருகில் உள்ள மரத்தில் முதியவரின் உடல் தொங்கியது சுற்று வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News