உள்ளூர் செய்திகள்

விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2022-07-22 09:35 GMT   |   Update On 2022-07-22 09:35 GMT
  • விபத்தில் தனயார் நிறுவன ஊழியர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (48). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சி அடுத்த கருந்தேவன்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மூதாட்டி வந்தார்.

அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் சந்திரசேகர் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News