உள்ளூர் செய்திகள்

பழமையான மரம் ரோட்டில் விழுந்தது

Published On 2022-07-03 07:08 GMT   |   Update On 2022-07-03 07:08 GMT
  • நெய்தாளபுரம் அருகே ரோட்டோரம் இருந்த ஒரு பழமையான மூங்கில் மரம் திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  • இதனால் அவ்வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத தால் பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, தலமலை, ஆசனூர் உள்பட பல்வேறு மலை பகுதிகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதியான இந்த ரோட்டோரங்களில் பழமையான மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன.

மேலும் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் கோடிபுரம், காந்தி நகர், தொட்டாபுரம், சிக்கள்ளி என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதி கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது மழை பொழிவு இல்லை. ஆனால் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை நெய்தாளபுரம் அருகே ரோட்டோரம் இருந்த ஒரு பழமையான மூங்கில் மரம் திடீரென சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் அவ்வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத தால் பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன.

Tags:    

Similar News