உள்ளூர் செய்திகள் (District)

மது விற்ற வாலிபர் கைது

Published On 2022-09-21 09:31 GMT   |   Update On 2022-09-21 09:31 GMT
  • கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

ஆப்பக்கூடல்:

அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News