மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
- மரத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்
- தேனீ கொட்டியதால் விபரீதம் ஏற்பட்டுள்ளது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த தூரபாளையம் திருவ ள்ளூவர் தெருவை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 34). இவருக்கு இன்னும் திரும ணம் ஆகவில்லை. கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவ த்தன்று முத்துசாமி அவரது உறவினர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் ஆகிய 3 பேரும் ஆலுச்சாம்பாளையத்தில் உள்ள குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டுவதற்கு சென்ற னர். இந்நிலையில் முத்து சாமி மரத்தில் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்த போது அவரை தேனீ கொட்டி விட்டது.
இதனால் முத்துசாமி மரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை அங்கிரு ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.