உள்ளூர் செய்திகள்

சாலையில் உருண்டு விழுந்த பாறை

Published On 2023-11-07 09:39 GMT   |   Update On 2023-11-07 09:39 GMT
  • பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது.
  • யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் அதிக அளவில் இந்த பாதையில் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பொழிந்து வருவதால் மலைப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகளில் பிடிப்பு தன்மை குறைந்து பாறைகள் சாலையில் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டிநெடு என்ற இடத்தின் அருகே பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்த தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News