உள்ளூர் செய்திகள்

ஒன்றரை மாத ஆண் குழந்தை திடீர் சாவு

Published On 2023-11-01 10:29 GMT   |   Update On 2023-11-01 10:29 GMT
  • கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
  • டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி கருக்கம் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (27). கோவில் பூசாரி. இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதையடுத்து கிருத்திகாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி குறைபிரசவத்தில் (ஏழரை மாதம்) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அதிகாலை கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சில மணி நேரம் கழித்து குழந்தையை குணசேகரன் பார்த்தபோது எவ்வித அசைவும் இன்றி இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருததுவமனையில் சிகிசசைக்கு சேர்த்தனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News