உள்ளூர் செய்திகள்

சாலையில் உலா வந்த சிறுத்தையை படத்தில் காணலாம்.

சாலையில் உலா வந்த சிறுத்தை

Published On 2023-04-12 08:27 GMT   |   Update On 2023-04-12 08:27 GMT
  • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
  • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News