உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர் ஓட்டி சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது

Published On 2023-09-17 09:52 GMT   |   Update On 2023-09-17 09:52 GMT
  • காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
  • உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

சென்னிமலை:

சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.

இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News