உள்ளூர் செய்திகள்

3 அடி சுருட்டை விரியன் பாம்பு

Published On 2023-10-17 15:00 IST   |   Update On 2023-10-17 15:00:00 IST
  • வீட்டின் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
  • தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை டவுன் காட்டூர் ரோடு பாண்டியன் வீதியில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

3 அடி நீளம் கொண்ட அந்த சுருட்டை விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

Similar News