உள்ளூர் செய்திகள்

சீட்டாடிய 7 பேர் கைது

Published On 2023-10-03 09:12 GMT   |   Update On 2023-10-03 09:12 GMT
  • அந்த பகுதியில் சிலர் சீட்டாடி கொண்டு இருந்தனர்.
  • போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கோபி போலீசார் பாரியூர் ரோடு தகர பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சீட்டாடி கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அப்புசாமி (56), குமார் (50), சோமசுந்தரம் (30), மோகன்ராஜ் (27), பாலு (56), ராம்குமார் (27) என தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.3 ஆயிரத்து 50 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News