- தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இளவயதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
ஈரோடு,
விளையாட்டு துறையில் சாதனை படைத்து நலிந்த நிலையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதற்கு தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
அந்த போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்,
இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளவயதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 31-1-2023 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
மாத வருமானம் ரூ.15 ஆயிரம் வரை இருக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியம் பெற்று வந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
இந்த விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி மின்னஞ்சல் மூலமாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து–ள்ளார்.