உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது

Published On 2023-07-22 12:22 IST   |   Update On 2023-07-22 12:22:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யபட்டனர்
  • 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோக்கரை யன் பேட்டையை சேர்ந்த சதிஸ் (வயது 28), கோகுல் (22), முகமது தஸ்தகிர் (22) ஆகிய 3 பேரும் ஈரோடு மொடகுறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த ஈரோடு டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்றுகொண்டிருந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா வை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர். 

இதேபோல் பெருந்துறை தலையம்பாளையம் பிரிவு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரவி (51) என்பவர் தடை செய்யபட்ட புகை யிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். தகவல றிந்த பெருந்துறை போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்த னர். பின்னர் ரவியை கைது செய்து வழக்குபதிவு செ ய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். கோபிசெட்டிபாளையம் ரேசன் கடை தெருவை சேர்ந்தவர் தம்பா என்ற நந்தகுமார் (25). இவர் கோபி கமலா ரைஸ் மில் தெருவில் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்றுகொண்டிருந்த தம்பா என்ற நந்தகுமாரை கைது செய்து அவர் வைத்தி ருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். பசுவனபுரம் அருகே அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை ((55) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். தகவல றிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற அண்ணாதுரை யை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (38). இவர் அதே பகுதியில் அரசு அனுமதி யின்றி மதுபாட்டி ல்கள் விற்பனை செய்து கொண்டி ருந்தார். தகவலறி ந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் அவர் வைத்திருந்த 22 மதுபாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News