உள்ளூர் செய்திகள்
- பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 3 சண்டைக்கோழிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகு தியில் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கோழிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த புதூர் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற மகேஷ் (வயது 47), மொட க்குறிச்சி ஜெயக்குமார் (25), கருங்கல்பாளையம் பிர னேஷ் (வயது 20), பஞ்சலி ங்கபுரம் விக்னேஷ் (24), கரூர் மாவட்டம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 3 சண்டைக்கோழிகள் மற்றும் 1500 பண த்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது போலீசார் வழ க்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.