உள்ளூர் செய்திகள்

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2023-06-07 08:20 GMT   |   Update On 2023-06-07 08:20 GMT
  • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
  • இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு, 

ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News