உள்ளூர் செய்திகள்

இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-08-16 09:25 GMT   |   Update On 2023-08-16 09:25 GMT
  • வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தி யூர் கிருஷ்ணாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் வெள்ளை கவுண்டர் (வயது 83). இவரு க்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருப்பதால் தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததால் மன வேதனையில் இருந்த வெள்ளைகவுண்டர் சம்பவத்தன்று கிருஷ்ணா புரம் கெட்டி சமுத்திரம் ஏரிக்க ரை அருகே உள்ள ஒரு மர த்தில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வெ ள்ளை கவுண்டரின் மகள் பவளக்கொடி இதுகுறித்து அந்தியூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிதா ஹாதுன் (24). இவர் கடந்த 5 வருட ங்களாக சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்துக் கொண்டு அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வந்தார். இந்நிலையில் ஜாகிதா ஹா துனுக்கு உடல்நிலை பாதி க்கப்பட்டதாக கூறப்படுகி றது.

சம்பவத்தன்று விடு தியில் பின்புறம் உள்ள ஒரு மர த்தில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஜாகிதா ஹாதுனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்து றை மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோ தித்த மருத்து வர் ஜாகிதா ஹாதுன் ஏற்க னவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

இதையடு த்து விடுதியின் வார்டன் நிஷா (28) சென்னி மலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சி கோவில் சின்னிய ம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் மாறன் (54). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபடுவார்.

இந்நிலை யில் சம்பவத்தன்று மாறன் வீட்டில் உள்ள பூச்சிக்கொ ல்லி மருந்தை குடித்துவி ட்டார். பின்னர் உறவின ர்கள் மாறனை கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் ரமேஷ் காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News