தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
- கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
- அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.
அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.