உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2023-10-04 09:57 GMT   |   Update On 2023-10-04 09:57 GMT
  • சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
  • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரோடு:

பெருந்துறை பங்களா வீதி பவானி சாலை அண்ணா சிலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் வீதியை சேர்ந்த மோகன வசந்த் (22), அதேபகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பது தெரியவந்தது.

அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பெருந்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஆப்பக்கூடல் புன்னம் செங்கோம்பாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக செதுனாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (48) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News