உள்ளூர் செய்திகள்

21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-09-27 07:25 GMT   |   Update On 2022-09-27 07:25 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
  • மெகா தடுப்பூசி முகாமில் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 515 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 350 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 813 பேரும் என மொத்தம் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News