உள்ளூர் செய்திகள்

போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-22 09:56 GMT   |   Update On 2023-06-22 09:56 GMT
  • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
  • மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் அதே பகுதியை சே ர்ந்த மோக ன்ராஜ் (37), வடுகபாளையம் புதூரை சேர்ந்த குமார் (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் குயில் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போலி லாட்டரிச் சீட்டுக ள் 10 எண்ணிக்கையில் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News