உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

Published On 2022-10-13 09:30 GMT   |   Update On 2022-10-13 09:30 GMT
  • அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சப் -இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தியூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தாமரைக்கரை பகுதியை சேர்ந்த சித்தன், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், சேகர், சந்தோஷ், ராஜா, குமார், ஊசி மலையை சேர்ந்த கிரியன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 11,960 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News