உள்ளூர் செய்திகள்

முதியோர் காப்பகத்திற்கு நிதி உதவி

Published On 2023-03-27 06:52 GMT   |   Update On 2023-03-27 06:52 GMT
  • தியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை
  • இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் நடத்தி வரும் முதியோர் காப்பக த்திற்கு திருப்பூர் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் வருகை தந்தார் .அப்போது காப்பகத்திற்கு ஐந்தரை லட்சம் மதிப்பில் உள்ள புதிய ஜெனரேட்டர் வாங்குவதற்கு சந்திரசேகர் மற்றும் ஜெகதீஷ் குமார் ஆகியோர் காசோலையை வழங்கினர்.

இதில் கோபி அபி மருத்துவமனை செந்தில்நாதன் மற்றும் நாகராஜ் முதல்வர் மற்றும் ராமலிங்கம் வேளாண்மை பிரசிடெண்ட் மற்றும் வெங்கடேஷ் சிறுமுகை ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினர். மற்றும் புளியம்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உருவாகி வரும் ரோட்டரி சங்கம் கேன்சர் சென்டருக்கு ரூ.7 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதற்கு முன் தொகையாக இரண்டரை லட்சத்திற்கான காசோலையை ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். மேற்படி இந்த ஆண்டு நடைபெற்ற பணிகள் ரூ.25 லட்சம் மதிப்பில் காணொலி மூலம் நிர்வாகிகளுக்கு காண்பிக்க ப்பட்டது. இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் இளங்குமரன் தலைமை ஏற்றார். மற்றும் ஆர் சிவகுமார், தலைவர் மணிக்குமார் ,செயலாளர் மோகனசுந்தரம், பொருளாளர் சுப்பிர மணியம், சண்முகம் முன்னி லை வகித்தனர். மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News