உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் பங்கேற்றவர்களை படத்தில் படத்தில் காணலாம்.


பாவூர்சத்திரத்தில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

Published On 2022-11-11 09:19 GMT   |   Update On 2022-11-11 09:19 GMT
  • சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
  • தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.

தென்காசி:

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.

பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News