உள்ளூர் செய்திகள்

ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம்: அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்ட வேண்டும்

Published On 2022-08-22 14:45 IST   |   Update On 2022-08-22 14:45:00 IST
  • பட்டாசு வெடிகள் வைத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
  • அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் முகாம் உள்ளது. இந்த காட்டு யானைகள் தற்போது சிகரளப்பள்ளி மற்றும் பதிமடுகு வனப்பகுதிகளில் மாறி மாறி உலா வருகிறது.

இந்த நிலையில் கிராமத்தில் புகுந்த காட்டுயானை தக்காளி தோட்டத்தில் புகுந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வனத்துறையின் பானம், பட்டாசு வெடிகள் வைத்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

வேறு வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News