உள்ளூர் செய்திகள்

புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமை யூனியன் சேர்மன் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்

Published On 2022-11-14 09:06 GMT   |   Update On 2022-11-14 09:06 GMT
  • புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது.
  • இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது.

புதியம்புத்தூர்:

தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள சங்கம் பட்டி குலசேகர நல்லூர், தெற்கு ஆரைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று யூனியன் சேர்மன் ரமேஷ் பார்வையிட்டார். அவருடன் கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டை சாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்

Tags:    

Similar News