உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சோலார் பேனல் ஆய்வுக்கு சென்ற என்ஜினீயர் பலி

Published On 2022-06-12 14:33 IST   |   Update On 2022-06-12 14:33:00 IST
  • 60 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை:

சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் நவீன் ராமலிங்கம்(30). இவர் கோவை வடவள்ளியில் உள்ள நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புனிதா (29) சத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நவீன் ராமலிங்கம் நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள சோலார் பேனலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது சுமார் 60 அடி உயர மேற்கூரையில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நவீன் மனைவி புனிதா மருத்துவமனை நிர்வாகம் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News