உள்ளூர் செய்திகள்

சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சாவு

Published On 2023-07-18 15:12 IST   |   Update On 2023-07-18 15:12:00 IST
  • வாகனம் சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
  • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் நவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தருமபுரி,

ஈரோடு மாவட்டம் சேர்வராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் நவீன்குமார் (வயது22). இவர் பி.இ. மெக்கானிக் படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற நவீன்குமார். நேற்று ஓசூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த நவீன்குமாரை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் நவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நவீன் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News