உள்ளூர் செய்திகள்
கூடலூர் பகுதியில் என் மண், என் தேசம் நிறைவு
- பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- நகராட்சி ஊழியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
கூடலூா் நகராட்சி சாா்பில் கடந்த ஒரு வாரமாக 'என் மண், என் தேசம்' நிகழ்ச்சி நடந்து வந்தது.
அப்போது மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பங்களிப்புடன் தூய்மைப் பணிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் 'என் மண், என் தேசம்' நிறைவுநாள் நிகழ்ச்சி தொரப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், மாணவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.