உள்ளூர் செய்திகள்

பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-08-31 09:31 GMT   |   Update On 2023-08-31 09:31 GMT
  • வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.

சீர்காழி:

கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வட்டாட்சியரை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

இதை கண்டித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் இளவரசன், மத்திய செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை யில் 39 அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையொப்ப மிட்டு பணியை புறக்கணித்து வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வட்டாட்சியரை பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டி த்தும், அரசியல்வாதிகளுக்கு துணை போகும் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியா ளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News