உள்ளூர் செய்திகள்
குண்டாறு வனப்பகுதியில் உலா வந்த யானை கூட்டம்.
கொடைக்கானலில் குட்டிகளுடன் உலா வந்த யானை கூட்டம்!
- அதிகமாக தண்ணீர் வரத்து இருக்கும் பகுதியான குண்டாறு வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக வந்தது.
- வனத்துறையினர் விரைந்து வந்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதிகளிலும் பொதுமக்களின் விளை நிலங்களிலும் யானை கூட்டங்கள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. ஒரு சில நேரங்களில் பேரிஜம் வனப்பகுதியிலும், வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்கள் அதிகம் அமைந்துள்ள கிராமப் பகுதிகளிலும் யானைகள் உலா வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் காப்புக்காடுகளில் அதிகமாக தண்ணீர் வரத்து இருக்கும் பகுதியான குண்டாறு வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக உலா வந்தது.
அப்போது வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். யானைகள் உலா வருவதை அறிந்த வனத்துறையினர் யானைக் கூட்டத்தை விரைந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் யானைக் கூட்டங்கள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கப்பட்டது.