உள்ளூர் செய்திகள்

விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் படுகாயம்

Published On 2022-07-07 09:40 GMT   |   Update On 2022-07-07 09:40 GMT
  • மதுரை அருகே மின்வாரிய பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்தது.

மதுரை

மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தமிழக மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சரவணகுமாரும், மற்றொரு ஊழியர் வடிவேல் என்பவரும் சம்பவத்தன்று மதியம் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அது சரவணகுமார், வடிவேல் மீது மோதியது. இதில் சரவணகுமாருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. ஆனால் தூக்கி வீசப்பட்ட வடிவேலுக்கு உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சரவணகுமார் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை படுவேகமாக ஓட்டி வந்ததாக ஆனையூர் முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News