உள்ளூர் செய்திகள்

மானூர் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருட்டு

Published On 2023-06-12 09:06 GMT   |   Update On 2023-06-12 09:06 GMT
  • வேல்சாமிக்கு உக்கிரன்கோட்டை சாலை அருகே விவசாய தோட்டம் உள்ளது.
  • அதிர்ச்சி அடைந்த வேல்சாமி திருட்டு குறித்து மானூர் போலீசில் புகார் செய்தார்.

நெல்லை:

மானூர், கலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி (வயது56). விவசாயி. கலக்குடி- உக்கிரன்கோட்டை சாலையில் ஆற்றுப் பாலத்திற்கு அருகே இவருக்கு விவசாய தோட்டம் உள்ளது.

வேல்சாமி வழக்கம் போல் தண்ணீர் பாய்ச்ச அங்கு சென்ற போது அங்கிருந்த மோட்டார் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் மதிப்பு ரூ. 15 ஆயிரமாகும். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News