உள்ளூர் செய்திகள்

பல்லாவரத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

Published On 2022-11-10 06:20 GMT   |   Update On 2022-11-10 06:20 GMT
  • மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார்.
  • தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

தாம்பரம்:

பல்லாவரம், குளத்து மேடு, வேம்புலியம்மன் கோயில் 7-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு சிலுவை முத்து என்ற மேஸ்திரியும், குமார் (45) என்ற கொத்தனாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மின்விளக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குமார் கொண்டு சென்றார். இதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட குமார் அந்த இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News