உள்ளூர் செய்திகள்

முதியவர் கொலை

Published On 2022-06-25 10:18 GMT   |   Update On 2022-06-25 10:18 GMT
  • இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சகோதரரான ரவிசந்திரன் மகன் வீரசிங்கத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
  • இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலயே தேவேந்திரன் இறந்தார்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75).

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சகோதரரான ரவிசந்திரன் மகன் வீரசிங்கத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் மின்சார வாரியத்திற்கு பணம் கட்டாதால் வீரசிங்கம் வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொட ர்பாக வீரசிங்கத்திற்கும், தேவேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரசிங்கம் கடப்பாறையால் தேவேந்திரனை தாக்கி விட்டு தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலயே தேவேந்திரன் இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேவேந்தி ரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகமருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசிங்கத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News